Sunday, July 29, 2012

புத்தகத்திலிருந்து...


மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை - ப.சிங்காரம்

வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்த மாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை - ஜெயகாந்தன்


மழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின்போது - வண்ணநிலவன்
தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரைகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?