Sunday, December 2, 2012

இந்த வாரம் படித்ததில் பிடித்தது
 
 
தெருக்களில் அநாகரீகமாகக் குப்பைகளை வீசுபவனைப் பெருமையாகவும்,அதை அள்ளிச் சுத்தம் செய்பவனைக் கேவலமாகவும் பார்க்கிறது உலகம்.

ஒன்று புரிகிறது.இந்தப் பெற்றோர்கள் சினிமா,பீச்,பார்க் எல்லாம் தாண்டி புத்தகம் என்ற உலகத்துக்குள் பிள்ளைகளை அனுப்பவே இல்லை.

டூ வீலரில் அமர்ந்த்திருக்கும் நெருக்கம் கூறிவிடுகிறது ...காதலர்களா,புதுத் தம்பதியா,பழைய தம்பதியா என்பதை

நன்றி:ஆனந்த விகடன்

Sunday, September 9, 2012

நா.முத்துக்குமார் பாடல் வரிகள்

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஒ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே..
எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே..
நிஜம் தானே கேளடி, நினைவெல்லாம் நீயடி..
நடமாடும் பூ செடி, நீ என்னை பாரடி..

இது வரை எங்கிருந்தோம்?
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்?
உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா?
இன்னும் என்னை புரியலையா?
நான் சிறிது மகிழ்ந்து சிலிர்க்கும் மனதை நீ கொடுத்தாய்..
நான் நினைத்து நினைத்து ரசிக்கும் கனவை நீ அளித்தாய்.
எங்கேயோ உன்முகம், நான் பார்த்த ஞாபகம்..
எப்போதோ உன்னுடன், நான் வாழ்ந்த ஞாபகம்..

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஒ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
என் அருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே
நிஜம் தானே கேளடி, நினைவெல்லாம் நீயடி..
நடமாடும் பூ செடி, நீ என்னை பாரடி..

உன்னுடன் இருக்கையிலே,
நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே..
இதுவரை நானும் பார்த்த நிலவா?
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா?
உன்னுடன் நடக்கயிலே,
என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள்
ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே
நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாச காற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்
நிஜம் தானே கேளடி, நினைவெல்லாம் நீயடி..
நடமாடும் பூ செடி, நீ என்னை பாரடி..

உயிரே என் உயிரே என்னவோ நடக்றதே..
அடடா இந்த நொடி வாழ்வில் இனிகிரதே..
ஒ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே..
எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே..
எங்கேயோ உன்முகம், நான் பார்த்த ஞாபகம்..
எப்போதோ உன்னுடன், நான் வாழ்ந்த ஞாபகம்..
பொறுக்கிகளும்,பேமானிகளும்,சுரண்டல் பேர்வழிகளும் வாழ்வாங்கு வாழும் இந்த தேசத்தில்தான் இன்னமும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.அலைபேசி,கணினிப் புழக்கம் ஏகத்திற்கும் எகிறிவிட்ட நாட்டில்தான்,இன்னமும வறுமையும்,பசியும்,அவமானமும் துரத்த நமக்குச் சோறு போடும் விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான்.ஒரு விவசாயியின் மரணம் என்பது ஒரு நாட்டின் இறையாண்மையின் மரணம் என்பதை இந்தச் சமூகமும்,அதிகார மையங்களும் உணர வேண்டும்!


எழுதியவர்:ராஜி முருகன்
நன்றி:ஆனந்த விகடன்
உன்னைப் பிரிந்த பின்னரும்
நாம் சந்தித்த தேதியையும்
பிரிந்த தேதியையும்
மறக்க முடியவில்லை

இப்போது எந்தத் தேதி
எதற்கு என நினைவில்லை


'என்னை அழை' என
குறுஞ்செய்தி அனுப்புகிறாய்
என்னவென்று அழைக்க ?
அதை மட்டும் என்
தலையில் கட்டிவிட்டாய்


நம்மை யாரும் பிரிக்க முடியாது
என்று பல முறை சொல்வாய்
இன்று நீயே நம்மைப் பிரித்தாய்
யாரும் என்பதில் நீயும் நானும்
சேர்த்தியில்லை என உணர்த்தி.



எழுதியவர்:பேயோன்
நன்றி:ஆனந்த விகடன்

 

Monday, September 3, 2012

படித்ததில் பிடித்தது...

"தற்கொலை செய்துகொள்வதற்கு
வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்?
வாழ்ந்துதான் பாரேன்..”

Neethaane En Ponvasantham

Combination of Beauty and Energy - Kajol

Sunday, August 26, 2012

நான் ரசித்த வரிகள்
Singers: Karthik, Saindhavi
Composer: Vijay Antony
Lyrics: Thamarai

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்
இப்படி கண் இமைத்தால்
நான் எப்படி உன்னை ரசிப்பேன்
இப்படி நீ சிரித்தால்
நான் எப்படி உயிர் பிழைப்பேன் ..


இப்படி இப்படி என் வழி மறித்தால்
எப்படி எப்படி நான் நடந்திடுவேன்
இப்படி இப்படியே முகம் சிவந்தால்
எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்
இப்படி இப்படியே பூ கொய்தால்
எப்படி எப்படி நான் மலர்ந்திடுவேன்
இப்படிஇப்படியே தடை விதித்தால்
எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்..
இப்படி இப்படியே போர்த்திக்கொண்டால்
எப்படி எப்படி நான் திறந்திடுவேன்
இப்படி இப்படி  நீ அடம்பிடித்தால்
எப்படி எப்படி நான் விலகிடுவேன்
இப்படி இப்படியே கிரங்கடித்தால்
எப்படி எப்படி நான் உறங்கிடுவேன்
இப்படி இப்படி நீ காதலித்தால்
எப்படி எப்படி நான் மறுத்திடுவேன் ..



கவிஞர் வாலியின் வரிகள் -

மன்மதனின் தாய் மொழி நான்
மீசை இல்லா மின்மினி நான்
தித்தித்திடும் தீக்குச்சி  நான்
தென்றலுக்கு தங்கச்சி நான்


இந்த வாரம் மிகவும் ரசித்த வரிகள்:

 ஆனந்த விகடனில் வந்த வல்லம் தாஜிபால் எழுதிய 'அலுவல்' கவிதையின் கடைசிப் பகுதி -

" ரசிப்பதை அலுவல்போல்
செய்பவன் நீ
அலுவலை ரசித்துச்
செய்பவன் நான்! "

Sunday, August 19, 2012

Beautiful Kajal..........

இனி வரும் நாட்களில் இங்கே  கவிஞர் நா.முத்துக்குமார் பாடல் வரிகளில் நான் ரசித்தவற்றைப் பார்ப்போமா..............




காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை

__________         _______________      ______________

உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே
உன் கூந்தலில் என்னை புதைத்துவிடு பெண்ணே
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே
கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே
கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே
அதை மறக்காதே

__________         _______________      ______________

பெண்ணே நான் உன் முன்னில்
ஒரு வார்த்தை பேசாமல் தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடி தடம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்

__________         _______________      ______________

Sunday, July 29, 2012

புத்தகத்திலிருந்து...


மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை - ப.சிங்காரம்

வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்த மாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை - ஜெயகாந்தன்


மழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின்போது - வண்ணநிலவன்
தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரைகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?