Sunday, September 9, 2012

உன்னைப் பிரிந்த பின்னரும்
நாம் சந்தித்த தேதியையும்
பிரிந்த தேதியையும்
மறக்க முடியவில்லை

இப்போது எந்தத் தேதி
எதற்கு என நினைவில்லை


'என்னை அழை' என
குறுஞ்செய்தி அனுப்புகிறாய்
என்னவென்று அழைக்க ?
அதை மட்டும் என்
தலையில் கட்டிவிட்டாய்


நம்மை யாரும் பிரிக்க முடியாது
என்று பல முறை சொல்வாய்
இன்று நீயே நம்மைப் பிரித்தாய்
யாரும் என்பதில் நீயும் நானும்
சேர்த்தியில்லை என உணர்த்தி.



எழுதியவர்:பேயோன்
நன்றி:ஆனந்த விகடன்

 

No comments:

Post a Comment